கர்நாடக பள்ளி தலைமை ஆசிரியர் மாணவர்களிடம் பாலியல் சீண்டல் கொடுத்ததால் சக மாணவிகள் அவரை அடித்து வெளுத்துள்ளனர்.
கர்நாடக மாநிலம் கட்டேரியில் அரசு பள்ளி மாணவிகள் ஒன்றுகூடி, பள்ளி தலைமை ஆசிரியரை தாக்கியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த அரசு பள்ளி தலைமை ஆசிரியர் சின்மயா ஆனந்த மூர்த்தி என்பவர் பள்ளி விடுதியில் ஒரு மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுப்பட்டதாகவும், அதன் காரணமாக தான் பள்ளி மாணவிகள் ஒன்று கூடி, அந்த தலைமை ஆசிரியரை தடி, துடைப்பத்தால் அடித்துள்ளனர்.
அதன் பிறகு பள்ளி தலைமை ஆசிரியர் சின்மயா ஆனந்த மூர்த்தி காவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டார். தற்போது அவர் போலீசார் விசாரணையில் இருக்கிறார்.