மஹாராஷ்டிராவில் காருடன் தீவைத்து கொண்டு தற்கொலைக்கு முயன்ற குடும்பம்

நிதி நெருக்கடி காரணமாக தந்தை, தாய் மற்றும் மகன் தற்கொலை முயற்சி உயிர்பிழைத்த-தாய் மற்றும் மகன்.

மஹாராஷ்டிரா: நேற்று(ஜூலை19) நாக்பூரில் 58 வயது நபர் ஒருவர், தனது மனைவி மற்றும் மகன் மூவரும் காரில் இருந்தபோது தீ வைத்துக்கொண்டு தற்கொலைக்கு முயற்சித்துள்ளனர்.இச்சம்பவத்தில் அந்த நபர் உயிரிழந்துவிட்டார்.

அவரின் மனைவி(55) மற்றும் மகன்(30) பலத்த தீக்காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிசிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், அந்த நபரின் வீட்டில் இருந்து எடுக்கப்பட்ட தற்கொலைக் கடிதத்தில், நிதி நெருக்கடி காரணமாக அவர் தனது வாழ்க்கையை முடித்துக் கொள்வதாகக் கூறியுள்ளார்  என போலீசார் தெரிவித்தனர்.

 

author avatar
Varathalakshmi

Leave a Comment