ரிசர்வ் வங்கியின் அலுவல் சாரா இயக்குநரகிறார்..!ஆடிட்டர் குருமூர்த்தி..!!

துக்ளக் இதழின் ஆசிரியான குருமூர்த்தி ரிசர்வ் வங்கியின் அலுவல் சாரா இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
துக்ளக் இதழின் ஆசிரியராக இருந்த சோ கடந்த 2016 ஆம் ஆண்டு மறைந்தார். சோ மறைவிற்கு பிறகு துக்ளக் இதழை ஆடிட்டர் குருமுர்த்தி கவனித்து வந்தார்.குருமூர்த்தி ரிசர்வ் வங்கியின் அலுவல் சாரா இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.மத்திய அமைச்சரவையால் அமைக்கப்பட்ட குழு இவருடைய நியமனத்தை உறுதி செய்துள்ளது.4 வருடத்திற்கு இப்பதவியில் நீடிப்பார்.
இது தொடர்பாக ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள குருமூர்த்தி,
 


முதல்முறையாக இயக்குநராக பொறுப்பேற்கிறேன்.இதுவரை எந்த தனியார் மற்றும் பொதுத்துறையிலும் இயக்குநர் பொறுப்பை நான்ஏற்றுக்கொண்டதில்லை.உண்மையில் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் இப்போது இந்த பொறுப்பை ஏற்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்

author avatar
kavitha

Leave a Comment