தூத்துக்குடியில் மரத்திலிருந்து பால் வடியும் அதிசயம்! வியப்பில் பொதுமக்கள்..!

தூத்துக்குடி அருகே சங்கரப்பேரி கிராமத்தில் பதினெட்டாம்படி கருப்பசாமி திருக்கோவிலில்  அதிசயம்,இந்த கோவில் 100 ஆண்டுகள் மிகப்பழமையும் பிரசித்தியும் பெற்ற கோவிலாகும்.
          இந்த திருக்கோவிலில் கடந்த 4 ம் தேதி  வெள்ளிக்கிழமையிலிருந்து கோவில் உள்பகுதியில் உள்ள மரங்களில் வயது குறைந்த மரமான வேப்பமரத்திலிருந்து பால் வடியத்தொடங்கியதை கோவில் பூசாரி கருப்பசாமி மற்றும் கோவில் கட்டடப்பணியில் ஈடுபட்டிருந்த கட்டட தொழிலாளர்கள் கண்டு ஆச்சரியம் அடைந்தனர்.
        இந்த ஆச்சரியம் கண்டு  சுற்றுப்புற கிராம மக்கள் வந்து பார்த்த வண்ணம் உள்ளனர். பக்தர்கள்  அனைவரும்
வருகை தந்து  பக்தி பரவசத்தோடு நேரில் கண்டு வணங்கி செல்கின்றனர் .மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்….      
author avatar
Dinasuvadu desk

Leave a Comment