நாடு முழுவதும் ஒரே நாளில் 30,773 பேருக்கு கொரோனா பாதிப்பு…!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 30,773 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.இறப்பு எண்ணிக்கை 309 ஆக பதிவாகியுள்ளது, இதுவரையிலும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,34,48,163 ஆக உள்ளது.

  • கடந்த 24 மணி நேரத்தில் 30,773 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் நாடு முழுவதும் இதுவரை 3,34,48,163 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
  • இதில் கடந்த 24 மணி நேரத்தில் இறப்பு எண்ணிக்கை 309 ஆக பதிவாகியுள்ளது. இதுவரை இந்தியாவில் 4,44,838 பேர் உயிரிழந்துள்ளனர்.
  • தொற்றில் இருந்து ஒரே நாளில் 38,945 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை இந்தியாவில் மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 3,26,71,167 ஆக உயர்ந்துள்ளது.
  • இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 3,32,158 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
  • நாடு முழுவதும் இதுவரை 80,43,72,331 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில்,85,42,732 பேர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர்.