9 வயது சிறுமிக்கு ஆபாச வீடியோவை காட்டி பாலியல் தொந்தரவு கொடுத்த தலைமையாசிரியர் கைது…!

9 வயது சிறுமிக்கு ஆபாச வீடியோவை காட்டி பாலியல் தொந்தரவு கொடுத்த தலைமையாசிரியர் கைது. 

உத்தரபிரதேசத்தின் சீதாபூரில் உள்ள ஒரு பள்ளியின் தலைமை ஆசிரியர், 4-ஆம் வகுப்பு பயிலும் சிறுமிக்கு ஆபாச வீடியோ கிளிப்பைக் காட்டி பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதனையடுத்து, இதுகுறித்து சிறுமி தனது தந்தையிடம் கூறியுள்ளார். சிறுமியின் தந்தை இதுதொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

 அந்த புகாரின் படி, தனது மகள் 9 வயது சிறுமி. நான்காம் வகுப்பு படிக்கும் மாணவி. இவர் சித்தாப்பூர் கோண்ட்லாமாவ் தொகுதியில் உள்ள பள்ளிக்கு சென்றபோது இந்த சம்பவம் நிகழ்ந்ததாக கூறியுள்ளார். தலைமை ஆசிரியர் பள்ளி வளாகத்தில் உள்ள ஒரு அறைக்கு சிறுமியை அழைத்து சென்றுள்ளார். அங்கு அவர் ஒரு ஆபாச வீடியோவை காட்டி உள்ளார். சிறுமி அதற்கு எதிர்ப்பு தெரிவித்த போது உடனடியாக அவர் அறையின் உள்ளே இருந்து கதவை பூட்டியுள்ளார்.

பின் வீடு திருப்பிய  சிறுமி தனக்கு நேர்ந்த கொடுமையை தனது தந்தையிடம் கூறினார். சம்பவம் தொடர்பாக சிறுமியின் தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் போலீசார் தலைமை ஆசிரியர் மீது பலாத்கார வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். மேலும் குற்றம்சாட்டப்பட்டவர் விசாரிக்கப்பட்டு வரும் நிலையில், அவர் இதற்கு முன்பும் இதைப் போன்ற செயல்களில் ஈடுபட்டு இருப்பதாக காவல்துறை வட்டாரங்கள் தகவல் அளித்துள்ளனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.