செம்பரப்பாக்கம் ஏரியில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த தந்தை, மகன், மகள்…!

செம்பரப்பாக்கம் ஏரியை சுற்றி பார்க்க  சென்ற, தந்தை, மகன், மகள் மூவரும் பரிதாபமாக  உயிரிழந்துள்ளனர்.

குன்றத்தூரை அடுத்த புதுவட்டாரம் பகுதியை சேர்ந்த, உஸ்மான் என்பவர், தனது மகன் (7) மற்றும் மகளுடன் (11) செம்பரப்பாக்கம் ஏரியை சுற்றி பார்க்க  சென்றுள்ளனர். அப்போது ஏரியில் அவரது மகள் தவறுதலாக  விழுந்துள்ளார்.இதனையடுத்து, அவரை காப்பாற்ற முயன்ற அவரது தம்பியும் எதிர்பாராத விதமாக விழுந்துள்ளார்.

இந்நிலையில், இருவரையும் காப்பாற்ற அவர்களது தந்தை உஸ்மான் முயற்சி செய்துள்ளார்.  இதனை தொடர்ந்து, மூவருமே தண்ணீரில் மூழ்கிய நிலையில், மக்கள் உஸ்மானை மீட்டு கரைக்கு கொண்டு வந்த நிலையில், அவர் உயிரிழந்துள்ளார். மேலும், தவறி விழுந்த  குழந்தைகளையும் தேடும் பணியில் தீயணைப்பு துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.