சட்டவிரோதமாக இயங்கும் தமிழக தண்ணீர் நிறுவனங்கள் மீது நடவடிக்கை!

சட்டவிரோதமாக இயங்கும் தமிழக தண்ணீர் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க உச்சநீதிமன்றம் உத்தரவு.

சிவமுத்து என்பவர் தமிழகத்தில் சட்ட விரோதமாக நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார். இந்நிலையில் இந்த வழக்கை மார்ச் மாதத்தில் விசாரித்த நீதிபதிகள் கொரோனா காலத்தை கருத்தில் கொண்டு தற்போது அனைத்து குடிநீர் நிறுவனங்களும் தற்காலிகமாக இயங்க அனுமதிக்க உத்தரவிட்டார்.
இந்நிலையில், தற்பொழுது தமிழகத்தில் சட்ட விரோதமாக இயங்கக்கூடிய தனியார் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க தற்போது உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நவம்பர் 19ம் தேதிக்குள் நடவடிக்கை குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
author avatar
Rebekal