ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் உள்பட 6 பேர் மீது கொலை வழக்குப்பதிவு – சிபிசிஐடி

தட்டார்மடத்தைச் சேர்ந்த செல்வன் கொலை தொடர்பாக ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் உள்ளிட்டோர் மீது கொலை வழக்குப் பதிவு செய்தது சிபிசிஐடி.

தூத்துக்குடி மாவட்டம் தட்டார்மடம் சேர்ந்த செல்வன் என்ற இளைஞரை நிலத்தகராறு காரணமாக கடந்த 17-ஆம் தேதி காரில் கடத்தி கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அதிமுக பிரமுகர் திருமணவேல், முத்துகிருஷ்ணன் மற்றும் காவல் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஆயுதப்படைக்கு மாற்றப்பட்ட ஹரிகிருஷ்ணனை சஸ்பெண்ட் செய்து நெல்லை சரக டிஜிபி பிரவீன்குமார் அபினவ் உத்தரவிட்டிருந்தார்.

தலைமறைவாக இருந்த வந்த அதிமுக பிரமுகர் திருமணவேல் மற்றும் முத்துகிருஷ்ணன் ஆகிய இருவரும் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். மேலும், இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக டிஜிபி உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், கொலை தொடர்பாக திருமணவேல், ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் உள்பட 6 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் கொலை வழக்குப்பதிவு செய்தது சிபிசிஐடி.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்