ஈரோடு மாவட்டம் அருகே இரு சக்கர வாகனங்கள் மீது அரசு பேருந்து மோதி 4 பேர் பலி.!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்தது இதனால் போக்குவரத்து முடக்கப்பட்டது, மேலும் பேருந்து சேவை நிறுத்தப்பட்டு இருந்தது.

இந்நிலையில் கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை தமிழக முதலமைச்சர் பழனிசாமி மாவட்டங்களில் மட்டுமே பேருந்து இயங்க அனுமதி என அறிவித்தார். மேலும் ஈரோடு மாவட்டத்தில் இருசக்கர வாகனங்கள் மீது அரசு பேருந்து ஒன்று மோதி 4 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

லாக்காபுரம் பகுதியில் ஒரு பேருந்து கட்டுப்பாட்டை இழந்து வேகமாக வந்து இரண்டு இரு சக்கர வாகனங்கள் மீது மோதியதால் 4 பேர் பரிதாபமாக சம்பவ இடத்தில் உயிரிழந்தனர். மேலும் இந்நிலையில் இது குறித்து அப்பகுதி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விபத்து எப்படி நடந்தது என்று விசாரணை செய்து வருகின்றனர்.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.