மன் கீ பாத் வானொலி நிகழ்ச்சியில் மதுரை நபர் குறித்து குறிப்பிட்ட பிரதமர் மோடி.!
மதுரையில் சலூன் நடத்தும் மோகன் என்பவர் தனது மகனின் படிப்பு செலவுக்காக சேர்த்து வைத்த ரூ.5 லட்சத்தை ஏழைகளுக்கு நிவாரணமாக அளித்துள்ளார். இதனை பிரதமர் மோடி மன் கீ பாத் வானொலி நிகழ்ச்சியில், தனது மகனின் படிப்பு செலவுக்காக வைத்திருந்த ரூ.5 லட்சம் ஏழை மக்களுக்கு உதவ மோகன் செலவிட்டுள்ளார் என்று தெரிவித்துள்ளார்.
தனது வருமானம் முழுவதையும் மக்களுக்காக செலவிடும் மோகனுக்கு பாராட்டுகள் என்று மோடி கூறியுள்ளார். மக்களின் ஓத்துழைப்பே கொரோனா வைரஸிற்கு எதிரான போரில் வெற்றி பெற முக்கிய காரணம் என்று குறிப்பிட்டுள்ளார்.