இந்திரா காந்தி பற்றி கருணாநிதி இப்படி பேசியிருக்கிறார்.! – ஹெச்.ராஜா.!

மறைந்த திமுக தலைவர் கருணாநிதி குறித்து வார தாள் ஒன்றில் வெளிவந்த பழைய நிகழ்வை சுட்டிக்காட்டிய ஹெச்.ராஜா.

தனியார் தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் பாஜக சார்பில் மாநிலக் குழு செயலாளர் கரு. நாகராஜனும், காங்கிரஸ் கட்சி சார்பில் கரூர் தொகுதி எம்.பி.ஜோதிமணியும் மற்றும் பல்வேறு கட்சி சேர்த்தவர்கள் கலந்துகொண்டனர். இதில், கரு.நாகராஜன் பேசும்போது, எம்.பி. ஜோதிமணியை தரக்குறைவாக விமர்சித்துள்ளார். மேலும், அவருடைய பேச்சில் ஜோதிமணியை ஒருமையில் குறிப்பிட்டுப் பேசினார். இந்தப் பேச்சுக்குக் எம்.பி. ஜோதிமணி கடும் கண்டனம் தெரிவித்து, உடனடியாக விவாதத்திலிருந்து வெளியேறினார்.

இந்த வீடியோ பதிவு இணையத்தில் வெளியாகி, கரு.நாகராஜனுக்கு எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன. ஜோதிமணிக்கு ஆதரவாகப் பலரும் கருத்துகள் தெரிவித்து வருகிறார்கள். கரு.நாகராஜன் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர். ஒருபக்கம் ஹெச்.ராஜா, அவரது ட்விட்டர் பக்கத்தில், மறைந்த திமுக தலைவர் கருணாநிதி அவர்கள், பெண் என்பதால் எவ்வளவு மரியாதையோடு திருமதி.இந்திரா காந்தி அவர்களை பற்றி பேசியுள்ளார் என்றும் இந்த மாதிரி கரு.நாகராஜன் அவர்களுக்கு பேசத் தெரியவில்லையே என்று பதிவிட்டுள்ளார். 

அதாவது, மதுரையில் பொதுக் கூட்டத்தில் திமுகவினர் நடத்திய போராட்டத்தில் இந்திரா காந்தி அம்மையாருக்கு கல்லடி பட்டு தலையில் ரத்தம் ஒழுகியதை திமுக தலைவர் கருணாநிதி அம்மையாருக்கு மாதவிலக்காய் இருந்திருக்கும் என்று சொல்லி தமிழனின் திராவிட பெருமையை தரணிக்கு காட்டினார் என்று ஒரு வார தாளில் வெளிவந்த செய்தியை ஹெச்.ராஜா சுட்டிக்காட்டினார்.

மேலும் மற்றோரு பதிவும் போட்டுள்ளார். அதில், கபடி விளையாடுவது என்றால் கோட்டை தொட்டுவிட்டு வருவது ரசிக்காது. கோட்டைத் தாண்டி ஏறி அடிப்பது தான் ஆட்டம். அதனால் இனி விவாதம் என்கிற பெயரில் தொலைக்காட்சிகளில் மாண்புமிகு பிரதமரை யார் இழிவாகப் பேசினாலும், அதே பாணியில் Tit for Tat நமது கட்சியினர் தயங்காமல் திருப்பி அடிக்க வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்