நாடே கொரோனாவுக்கு போராடும் நிலையில் மத்திய அரசுக்கு எதிராக போராடி வரும் காங்கிரஸ் ! – பிரகாஷ் ஜவடேகர்

நாடே கொரோனாவுக்கு போராடும் நிலையில் மத்திய அரசுக்கு எதிராக போராடி வருகிறது காங்கிரஸ் என்று பிரகாஷ் ஜவடேகர் கூறியுள்ளார்.

கொரோனா வைரஸின் பாதிப்பு நாளுக்கு நாள் உயரந்து வருகிறது. இந்தியாவில் கொரோனா வைரஸால் 24506 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 775 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனால் சமூக தொற்று ஏற்படுவதை தவிர்க்க ஊரடங்கு உத்தரவு, நோய் அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்தி கண்காணித்தல் என பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் இந்திய அரசால் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்நிலையில், காங்கிரசின் ரன்தீப்  சுர்ஜிவாலா ‘சென்ட்ரல் விஸ்டா திட்டத்துக்கு 23 ஆயிரம் கோடி ரூபாயும், புல்லட் ரயில் திட்டத்துக்கு 1 லட்சத்து 10 கோடி ரூபாயும் மத்திய அரசு வீணாக செலவு செய்கின்றனர்’ என்று  குற்றம்சாட்டியுள்ளார்.

இதற்கு மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் நாடே கொரோனாவுக்கு போராடும் நிலையில் மத்திய அரசுக்கு எதிராக போராடி வருகிறது காங்கிரஸ் என்று கூறியுள்ளார். அதுமட்டுமின்றி இதற்கு காங்கிரஸ் கட்சி கண்டிப்பாக பதிலளிக்க வேண்டும் என்றார்.

author avatar
Vidhusan