தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு.!

  • தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
  • அதிகபட்சமாக 30 டிகிரி செல்சியஸ் இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மாலத்தீவு மற்றும் அதை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக மழைக்கு வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் வெப்பநிலை அதிகபட்சமாக 30 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்த பட்சமாக 22 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கும் என  சென்னை வானிலை ஆய்வு மையம்தெரிவித்துள்ளது.

 

author avatar
murugan