இன்று 71-வது இந்திய இராணுவ தினம் அனுசரிப்பு….!!!

இன்று இந்தியா முழுவதும் 71-வைத்து இந்திய இராணுவ தினம் கொண்டாடப்படுகிறது. 

இந்திய ராணுவத்தின் முதல் இந்திய தலைமைத் தளபதியாக 1949ஆம் ஆண்டு ஜனவரி 15ஆம் தேதி ஃபீல்டு மார்ஷல் கே.எம்.கரியப்பா பொறுப்பேற்றுக் கொண்டார். இந்த நாள் ஆண்டுதோறும் ராணுவ தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது.

ராணுவத்தில் பணியாற்றுபவர்களும், முன்னாள் ராணுவத்தினருக்கும், அவர்களது குடும்பங்களுக்கும் இந்த நாளில் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் குறிப்பிட்டுள்ளார்.

ராணுவத்தினர் நாட்டின் பெருமிதம் என்றும், நமது சுதந்திரத்தை காப்பவர்கள் என்றும் அவர் புகழாரம் சூட்டியுள்ளார். ராணுவத்தினர் விழிப்புடன் இருந்து எப்போதும் கண்காணிப்பு பணியை மேற்கொள்கிறார்கள் என்பதால்தான் மக்கள் பாதுகாப்பாக தூங்குகிறார்கள் என்றும் குடியரசுத் தலைவர் தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment