பஞ்சமி திதியையொட்டி பத்மாவதி தயார் கோவிலில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி வெகுவிமர்சை..!!லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடல்..!!

திருச்சானூர் பதமாவதி தாயார் கோவிலில் பஞ்சமி திதியையொட்டி இன்று சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி வெகு விமர்சையாக நடந்தது.

திருச்சானூர் பதமாவதி தாயார் கோவிலில் பஞ்சமி திதியையொட்டி இன்று சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியில் கலந்து கொண்ட லட்சக்கணக்கான பக்தர்கள் தெப்பக்குளத்தில் புனித நீராடினர்.

Image result for பத்மாவதி தாயார் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி


திருச்சானூர் உள்ள அலமேலுமங்காபுரத்தில் அமைந்துள்ள பத்மாவதி தாயார் கோவிலில் கார்த்திகை மாத பிரம்மோற்சவம் கடந்த  4 தேதி வெகு சிறப்பாக தொடங்கியது.இந்த பிரம்மோற்சவம் இன்று பஞ்சமி தீர்த்தத்துடன் நிறைவு பெறுகிறது.  

இன்று நிறைவு பெறும் கார்த்திகை மாத பிரம்மோற்சவத்தை ஒட்டி 
அதிகாலை 3 மணிக்கு திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இருந்து திருச்சானூர் பத்மாவதி தாயாருக்கு சீர்வரிசை பொருட்கள் மற்றும் 1.74 கிலோ எடையுடைய தங்கக் காசு மாலை மற்றும் அம்பாளுக்கு 776 கிராம் எடையுடைய தங்க ஆரம்  உள்ளிட்டவை கொண்டு வரப்பட்டு தயாருக்கு அணிவிக்கப்பட்டது. இதன் பின்னர் நடைபெற்ற சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியில் லட்சக்கணக்கான பக்தர் கலந்து கொண்டு அருளாசி பெற்றனர்.

author avatar
kavitha

Leave a Comment