அரசாணை -92 அனைத்து கல்லூரிகளிலும் அமல்படுத்திடகோரி கண்டன ஆர்ப்பாட்டம்…!

தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகையை குறைக்ககூடாது,அரசு மாணவர் விடுதிகளை முறையாக பராமரிக்க வேண்டியும்,அரசாணை -92ன்  கல்வி உதவித்தொகையை குறைக்க கூடாது மேலும் அதனை அனைத்து கல்லூரிகளிலும் அமல்படுத்திடகோரி  தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மற்றும் இந்திய மாணவர் சங்கம் (sfi) சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இப்போராட்டத்தில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில பொதுசெயலாளர் சாமுவேல் ராஜ் மற்றும் இந்திய மாணவர் சங்கதின் தென் சென்னை மாவட்ட செயலாளர் நிரூபன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment