இளைய தலைமுறையினரை புகை பழக்கத்திலிருந்து காக்க 8 வழிகள்!

இளைய தலைமுறையினரை புகை பழக்கத்திலிருந்து காக்க 8 வழிகள்.

இன்று இளைஞர்களில் பெரும்பாலானோர் புகைப்பழக்கத்திற்கும், மதுப்பழக்கத்திற்கும் அடிமையாகி உள்ளனர். அதிலும் அதிகமானோர் புகைப்பழக்கத்திற்கு தான் அடிமையாகியுள்ளனர். புகை பிடிக்கும் பழக்கத்தை இன்றைய இளம் தலைமுறையினர் நாகரீகமாக கருதுகின்றனர். 

தற்போது இந்த பதிவில், இன்றைய இளம் தலைமுறையினரை புகை பிடிக்கும் பழக்கத்திலிருந்து காக்க்கும் 8 வழிமுறைகள் பற்றி பார்ப்போம். 

வழிமுறைகள் 

  • நம்மை சுற்றி உள்ளவர்கள் புகை பிடிக்காமல் இருக்க முன்னுதாரணமாக திகழ வேண்டும். 
  • மற்றவர்களுக்கு புகை பிடிப்பதின் தீமைகள் மற்றும் உடல்நலக்கேடுகள் குறித்து எடுத்துரைக்க வேண்டும். 
  • சிறுவர்கள் இந்த பழக்கத்திற்கு அடிமையாகாமல் இருக்க, அவர்களை மிரட்டாமல், அவற்றின் தீமைகளை எடுத்துக் கூற வேண்டும். 
  • புகைப்பிடிப்பதால், நாம் நம் அன்றாட வாழ்வில் தேவையில்லாமல் எவ்வளவு பணத்தை செலவு செய்கிறோம் என்பதை எடுத்துரைக்க வேண்டும். 
  • புகைப்பிடிக்கும் பழக்கத்தால், பற்களில் ஏற்படும் கறை, கெட்ட வாடை, களைப்படைதல் ஆகியவற்றை பற்றி எடுத்து கூற வேண்டும். 
  • சிகரெட் வேண்டாம் என முடிவெடுத்த பின், அந்த பழக்கத்திலிருந்து மற்ற எந்த தீய பழக்கங்களுக்கும் அடிமையாக கூடாது என முடிவெடுக்க வேண்டும். 
  • ‘புகை நமக்கு பகை’ என்ற பழமொழியின் விளக்கத்தை குழந்தைகளுக்கு சொல்லி கொடுக்க வேண்டும். 
  • புகையிலைக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்வுகளில் குழந்தைகளை கலந்துகொள்ள செய்ய வேண்டும். 
author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.