உத்தரப்பிரதேசத்தில் லாரி – பேருந்து மோதிய விபத்தில் 8 பேர் உயிரிழப்பு, 25 பேர் படுகாயம்.
உத்தரபிரதேசத்தின் லக்கிம்பூர் கேரியில் 50 பயணிகளை ஏற்றிச் சென்ற தனியார் பேருந்து ஒன்று லாரி மீது நேருக்கு நேர் மோதிய விபத்தில் 8 பேர் உயிரிழந்த நிலையில், 25 பேர் படுகாயமடைந்தனர். இந்த விபத்தானது சாரதா ஆற்றின் பாலத்தில் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தௌர்ஹாராவிலிருந்து லக்கிம்பூருக்குச் சென்று கொண்டிருந்த பேருந்து விபத்துக்குள்ளானது. காலை 7:30 மணியளவில், பஹ்ரைச் நோக்கிச் சென்ற பேருந்தும், லாரியும் ஈசா நகர் காவல் நிலையம் அருகே உள்ள பாலத்தில் நேருக்கு நேர் மோதிக் கொண்டன.
இந்த விபத்தில் பேருந்தில் இருந்த 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காயமடைந்தவர்கள் அருகிலுள்ள சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர், அவர்களில் 12 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. உ.பி., லக்கிம்பூர் கேரியில் நடந்த விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு PMNRF-லிருந்து ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50,000 நிவாரணம் வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்தார்.
இன்றைய ஐபிஎல் போட்டியில் ஹைதராபாத் அணியும், குஜராத் அணியும் ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் மோத இருந்தன. இந்த போட்டி தொடங்கியிருந்த போது மழை…
சென்னை : ஐபிஎல்லில் நடக்கவிருக்கும் பெங்களூரு-சென்னை போட்டிகளுக்க்கான டிக்கெட் எடுக்கும் முயற்சியில் கிரிக்கெட் ரசிகர் ஒருவர் ரூ.67,000 வரை இழந்துள்ளார். ஐபிஎல் 2024 தொடருக்கான பிளே-ஆப் சுற்றுக்கான…
சென்னை: பிஎம்டபிள்யு ரக புதிய மாடலான எம் 1000 XR மாடல் இந்தியாவில் 45 லட்ச ரூபாய்க்கு களமிறங்கியுள்ளது. பைக் பிரியர்களால் அதிக கவனம் ஈர்க்கும் அதிவேக…
Plank exersize-பிளாங்க் உடற்பயிற்சி செய்வதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் யாரெல்லாம் செய்யக்கூடாது என்பதை பற்றி இப்பதிவில் காணலாம். உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள இன்றைய தலைமுறையினர் அதிகம்…
சென்னை : தன் மீது வைக்கப்படும் விமர்சனங்கள் குறித்து இளையராஜா விளக்கம் அளித்து வீடியோ வெளியிட்டுள்ளார். இசையமைப்பாளர் இளையராஜா தன்னுடைய பாடல்களை உரிமையை பெறாமல் எக்கோ மற்றும்…
சென்னை: எல்லை தாண்டி வந்து, இந்திய கடல் எல்லைக்குள் மீன்பிடித்ததாக இலங்கை மீனவர்கள் 14 பேர் கைது. நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே எல்லை தாண்டி மீன்பிடித்ததாக…