அடுத்த மாதம் தமிழகத்திற்கு 71 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் தருவதாக மத்திய அரசு கூறியுள்ளதாக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனாவின் தீவிரத்தை கட்டுப்படுத்தும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. அதன்படி, தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகளும் மும்முரமாக நடைபெறுகிறது. மேலும், மக்கள் அதிகளவில் தடுப்பூசி போடுவதில் ஆர்வம் காட்டுவதால் சில பகுதிகளில் தடுப்பூசி தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், இது குறித்து தற்பொழுது பேசியுள்ள மருத்துவத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம் அவர்கள், தமிழகத்தில் இதுவரை 1.44 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாகவும், 1.41 லட்சம் தடுப்பூசி கையிருப்பில் உள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும், வருகிற ஜூலை மாதத்தில் தமிழகத்திற்கு மத்திய அரசு 71 லட்சம் தடுப்பூசி தருவதாக கூறியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். குறிப்பாக இன்று மாலை இரண்டு லட்சம் தடுப்பூசிகள் தமிழகத்திற்கு வரவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
சென்னை: நாளை காலை பாஜக அலுவலகம் முன்பு அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் முற்றுகை போராட்டம் நடைபெற உள்ளது. டெல்லி மாநில முதல்வரும், ஆம் ஆத்மி கட்சி தலைவருமான…
சென்னை : இன்று நடக்கும் ஐபிஎல் போட்டியில் மழை வரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால், ஒருவேளை மழை குறுக்கிட்டால் ஐபிஎல் போட்டிகளில் ஓவர்கள் எப்படி குறைக்கிறார்கள்…
சென்னை: நியுராலிங்க் நிறுவனம் உருவாக்கிய டெலிபதி சிப் முன்னேற்றம் கண்டுள்ளது என எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ், எக்ஸ் சமூக வலைதள பக்க நிறுவனத்தின்…
சென்னை : இசையமைப்பாளர் இளையராஜா தனது பயோபிக் படத்திற்கு கண்டிஷன் போட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இசையமைப்பாளர் இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்று படத்தை கேப்டன் மில்லர், ராக்கி…
சென்னை: அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு Shift Base அடிப்படையில் பணி நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் கீழ்…
சென்னை : 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள தேர்தலில் விஜய்யுடன் கூட்டணி அமைப்பீர்களா என்ற கேள்விக்கு 'i am waiting' என சீமான் பதில் அளித்துள்ளார். நடிகர்…