இந்தியாவில் 70 பேர் டெல்டா வகை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் – மத்திய தொழில்நுட்ப துறை அமைச்சர்!

இந்தியாவில் டெல்டா வகை கொரோனா வைரஸால் 70 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய தொழில்நுட்ப துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை பெருமளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் முதன்முறையாக இந்தியாவில் கண்டறியப்பட்ட உருமாறிய டெல்டா வகை கொரோனா வைரஸ் பல நாடுகளிலும் பரவி வருவதுடன், இந்தியாவிலும் தொடர்ந்து பரவி வருகிறது. இந்நிலையில் இது தொடர்பாக மக்களவையில் மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் அவர்களிடம் எழுப்பப்பட்ட கேள்விக்கு அவர் பதில் அளித்துள்ளார்.

அதில், இந்தியாவில் கொரோனா வைரஸால் ஏற்படக்கூடிய மரபணு மாறுபாடுகளைக் கண்டறியும் பணியில் நாட்டில் 28 ஆய்வகங்கள்  ஒன்றிணைந்து செயல்பட்டு வருவதாகவும், இந்த ஆய்வகங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 58,240 பேரின் மாதிரிகள் மரபணு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாகவும் கூறியுள்ளார்.

மேலும் இதில் 46,124 மாதிரி பகுப்பாய்வு செய்யப்பட்டதாகவும், அதில் டெல்டா வகை வைரஸ் 17,168 மாதிரிகளில் இருந்ததாகவும், ஆல்பா வகை 4,172 மாதிரிகளில் இருந்தது கண்டறியப்பட்டதாகவும் கூறியுள்ளார். மேலும், 217 மாதிரிகளில் பீட்டா வகையும், ஒரு காமா வகையும் இருந்ததாகவும் கூறியுள்ளார்.

மேலும், கடந்த ஜூலை 23-ஆம் தேதி வரை இந்தியாவில் 70 பேர் டெல்டா வகை கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பது பரிசோதனையில் தெரியவந்துள்ளது எனவும், அதில் அதிக பட்சமாக மகாராஷ்டிராவில் தான் 23 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், மத்திய பிரதேசத்தில் 11 பேரும் தமிழகத்தில் 10 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Rebekal

Recent Posts

ஐபிஎல் தொடரின் மற்றொரு மிகப்பெரிய போட்டி !! சென்னை – பஞ்சாப் இன்று பலப்பரீட்சை !!

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக சென்னை அணியும், பஞ்சாப் அணியும் மோதுகிறது. நடந்து கொண்டிருக்கும் ஐபிஎல் தொடரில் இன்றைய 49-வது போட்டியாக சென்னை…

1 hour ago

ஸ்டோய்னிஸ் அதிரடியால் லக்னோ அணி அபார வெற்றி ! மும்பையின் ப்ளே ஆஃப் கனவு கேள்வி குறி !

IPL 2024 : இன்று நடைபெற்ற போட்டியில் லக்னோ அணி மும்பை அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஐபிஎல் தொடரின் 48வது போட்டியாக இன்று லக்னோ…

9 hours ago

எதுக்கு அவுங்க டீம்ல இல்ல? பிசிசிஐக்கு கேள்வி எழுப்பும் ரசிகர்கள் !

BCCI : டி20 உலகக்கோப்பைக்கான  பிசிசிஐ அறிவித்துள்ள இந்திய அணியை ரசிகர்கள் இணையத்தில் விமர்சித்து வருகின்றனர். ஐபிஎல் தொடர் நடைபெற்று வரும் நிலையில் தற்போது டி20 உலகக்கோப்பை…

14 hours ago

தெற்கு காசாவில் இஸ்ரேல் தாக்குதல் தொடரும்… நெதன்யாகு திட்டவட்டம்.!

Israel : தெற்கு காசாவில் இஸ்ரேல் தாக்குதல் தொடரும் என அந்நாட்டு பிரதமர் நெதன்யாகு திட்டவட்டமாக தெரிவித்தார். இஸ்ரேலுக்கு எதிரான ஹமாஸ் அமைப்பினரை முழுதும் அழிக்கும் வரையில்…

14 hours ago

ஐயோ பிரிச்சு பேசாதீங்க! குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகியது பற்றி ஜிபி முத்து!

Gp Muthu : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகியது பற்றி ஜிபி முத்து பேசியுள்ளார். குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சி பெரிய…

14 hours ago

உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் முதல் முறையாக துபே, சாம்சன்!

T20 World Cup 2024: டி20 உலக கோப்பை தொடருக்காக ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்தது. ஐபிஎல் தொடர் முடிந்த உடனே டி20 உலகக்கோப்பை…

14 hours ago