அடுத்த வார தலைவர் போட்டிக்கு தேர்வான 6 பேர் .! யார் யார் தெரியுமா.!

அடுத்த வார தலைவர் போட்டிக்கு ரியோ அணி மற்றும் அர்ச்சனா அணி தேர்வாகி வெற்றி பெற்றுள்ளனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் லக்ஷூரி பட்ஜெட் டாஸ்க் வழங்குவது வழக்கம் . அந்த வகையில் இந்த வாரம் பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு கடுமையான‌ டாஸ்க் ஒன்று கொடுக்கப்பட்டிருந்தது . தொடர்ந்து 45மணி நேரம் நடைபெறும் மணிக்கூண்டு எனும் டாஸ்க் கொடுக்கப்பட்டிருந்தது .

இதில் பிக்பாஸ் போட்டியாளர்கள் நேரத்தை கணிப்பதற்காக ஐந்து அணிகளாக பிரிந்து விளையாடினார்கள்.அதில் நிஷா , சனம் மற்றும் அனிதா ஆகியோர் ஒரு அணியாகவும் , பாலாஜி, சுச்சி மற்றும் ரம்யா ஆகியோர் ஒரு அணியாகவும், ரியோ, ஆரி மற்றும் கேபி ஆகியோர் ஒரு அணியாகவும் காலத்தை கணித்தார்கள் . மேலும் அர்ச்சனா, சம்யுக்தா மற்றும் சோம் ஆகிய மூவரும் ஒரு அணியாகவும், ஆஜீத், ஷிவானி மற்றும் ரமேஷ் ஆகியோர் ஒரு அணியாகவும் விளையாடினார்கள் . 5 அணிகளும் மழை,வெயில் ,புயலுக்கு இடையிலும் சிறப்பாக விளையாடினார்கள் .

இந்த டாஸ்க்கின் முடிவுகளை பிக்பாஸ் வெளியிட்டுள்ளார் . அதில் வெற்றி பெற போகும் நபர்கள் அடுத்த வார தலைவர் போட்டிக்கு தேர்வாகியுள்ளனர் . அதன்படி மணிக்கூண்டு டாஸ்கில் ரியோ அணி மற்றும் அர்ச்சனா அணிகள் வெற்றி பெற்றதாக தெரிகிறது
எனவே அடுத்த வார கேப்டன்சி டாஸ்க்கிற்கு அர்ச்சனா, சம்யுக்தா,சோம்,ரியோ,கேபி,ஆரி ஆகியோர் தேர்வாகியுள்ளதாக தெரிகிறது .

 

Leave a Comment