6-ஆம் வகுப்பு பயிலும் மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஐடிஐ மாணவன்….!!!

அரியலூர் மாவட்டம் அங்கியனூர் கிராமத்தை சேர்ந்தவர் வசந்த்.  இவர் அரியலூரில் அரசு ஐடிஐ-ல் இரண்டாம் ஆண்டு பயின்று வருகிறார். இவர் அதே கிராமத்தை சேர்ந்த 6-ஆம் வகுப்பு பயிலும் சிறுமியை பாலியல் தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், சிறுமியின் தாயார் அரியலூர் மகளீர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும் சிறுமியை அரியலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனையடுத்து, அந்த மாணவனை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment