பிஎஸ்என்எல் மூலம் 5ஜி சேவை – மத்திய அரசு

பிஎஸ்என்எல் மூலம் 5ஜி சேவை வழங்க டாடா நிறுவனத்திடம் உதவி கோரப்பட்டு சோதனை என தகவல்.

பிஎஸ்என்எல் மூலம் 5ஜி சேவை வழங்க முடிவு செய்துள்ளதாக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. பிஎஸ்என்எல் மூலம் 5ஜி சேவை வழங்க டாடா நிறுவனத்திடம் உதவி கோரப்பட்டு சோதனை நடத்தப்படும் எனவும் மத்திய அரசு கூறியுள்ளது. அக்.1ம் தேதி இந்தியாவில் முதல்முறையாக  அறிமுகமான 5ஜி சேவை குறிப்பிட்ட சில நகரங்களில் மட்டும் அமலுக்கு வந்துள்ளது.

அடுத்த 2 ஆண்டுகளில் படிப்படியாக நாடு முழுவதும் இதனை விரிவுப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்தியாவில் 3 முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்கள் உள்ளன. அதில், ஏர்டெல், ஜியோ தங்கள் பயனர்களுக்கு 5ஜி சேவை வழங்குகின்றன. இந்த நிலையில், பிஎஸ்என்எல் மூலம் 5ஜி சேவை வழங்க முடிவு செய்துள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment