ATM-ல் பணம் எடுக்கத் தெரியாதவரிடம் 50,000 மோசடி.!

புதுச்சேரி மாவட்டத்தில் ATM-ல் பணம் எடுக்கத் தெரியாதவரிடம் 50,000 மோசடி செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

புதுச்சேரி மாவட்டம் கிருமாம்பாக்த்தில் வசித்து வந்தவர் லட்சுமணன், இவர் கிருமாம்பாக்த்தில் உள்ள ஒரு அரசு மருத்துவமனையில் ஊழியராக பணியாற்றி வருகின்றார். இவருக்கு ATM- ல் பணம் எடுக்கத்தெரியாததால் பணம் எடுக்க தெரிந்தவர்களை அழைத்து வந்து செலவிற்காக பணம் எடுத்து வந்துள்ளார், அந்த வகையில் தனது உறவினர் வீடிற்கு சென்று தனது வீட்டிற்கு செல்லும் போது பணம் எடுக்க ஒரு நபரிடம் உதவி கேட்டுள்ளார்.

அப்பொழுது அந்த நபர் ATM கார்டை வாங்கிவிட்டு ரகசிய இலக்கத்தை போட்டுவிட்டு ATM கார்டு வேலை செய்யவில்லை என்று கூறியுள்ளார், இதனால் லட்சுமணன் திரும்பி சென்றுள்ளார் ஆனால் சிறிது நேரம் கழித்து லட்சுமணன் தொலைபேசிக்கு 50,000 தனது வங்கிக்கணக்கில் பறிபோனது தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் லட்சுமணன் உடனடியாக வங்கியில் புகார் அளித்தார் புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரித்த பொழுது சென்னையில் உணவகத்தில் வேலை செய்து வந்த முருகன் என்பது தெரியவந்துள்ளது. இதனால் அந்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.