அடுத்தடுத்து மோதிய 5 வாகனங்கள் – 5 பேர் உயிரிழப்பு

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே அடுத்தடுத்து 5 வாகனங்கள் மோதி ஏற்பட்ட விபத்தில் 5 பேர் உயிரிழப்பு. 

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே அடுத்தடுத்து தனியார் பேருந்து, 2 லாரிகள், 2 கார்கள் மோதியது. திருச்சி – சென்னை நெடுஞ்சாலையில் நிகழ்ந்த இந்த விபத்தில் 2 பெண்கள், 2 குழந்தைகள், ஓட்டுனர் உட்பட 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. மேலும், உயிரிழந்தவர்கள் எந்த ஊரைச் சேர்ந்தவர்கள் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment