திருச்சியில் ஆசிரியரிடம் இருந்து மர்ம நபர்கள் 5 பவுன் நகையை பறித்து சென்றனர்.
திருச்சி ஜான்தோப்பு கார்கில் நகரை சேர்ந்தவர் கற்பகம். இவர் அப்பகுதியை சேர்ந்த அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் மாலை தனது வீட்டின் அருகில் உள்ள கோவிலுக்கு சென்றுவிட்டு திரும்பும் போது பைக்கில் வந்த மர்மநபர்கள் அவரது கழுத்தில் உள்ள 5 பவுன் நகையை பறித்து சென்றுள்ளனர். இதனையடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.