விவசாயி கொலை வழக்கில் 4 பேருக்கு ஆயுள் சிறை தண்டனை.!

விவசாயி அடித்து கொன்ற வழக்கில் 4 பேருக்கும் ஆயுள் சிறைத் தண்டனை

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சோழபாண்டிபுரத்தை சேர்ந்தவர் சின்னப்பன் இவர் அப்பகுதியில் விவசாயம் செய்துவந்தார், இந்நிலையில் கடந்த 2013ம் ஆண்டு மே மாதம் 24ம் தேதி சின்னப்பன் கரும்புகளுடன் வாகனத்தில் செல்லும் போது அப்பகுதியை சேர்ந்த கோவிந்தன் என்பவர் அந்த பகுதிக்கு வண்டியில் வந்துள்ளார் மேலும் சின்னப்பன் வைத்திருந்த கரும்பு தோகை கோவிந்தன் மீது பட்டுள்ளது இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையிலோ பிரச்சனை முடிந்து வீட்டிற்கு சின்னப்பன் சென்றார், ஆனால் ஆத்திரம் தீராத கோவிந்தன் தனது உறவினர்கள் 4 பேரை சின்னப்பன் வீட்டிற்கு அழைத்து சென்று அவரை கடுமையாக தடியால் தாக்கினர் இதில் படுகாயமடைந்த சின்னப்பன் சம்பவ இடத்திலே உயிரிழந்தார்.

இந்நிலையில் இந்த கொலை வழக்கு குறித்து காவல்துறையினர் வேடப்பன், கோவிந்தன், குமாா்,தணிகைநாதன் ஆகியோரை கைது செய்தனர் மேலும் விழுப்புரம் மாவட்ட கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கின் விசாரணை நேற்று நடந்தது மேலும் இந்த குற்றஞ்சாட்டப்பட்ட கோவிந்தன், குமாா், வேடப்பன், தணிகைநாதன் ஆகிய 4 பேருக்கும் ஆயுள் சிறைத் தண்டனை விதித்து.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.