திருப்பத்தூர் : அரசு சொகுசு பேருந்து – தனியார் ஆம்னி பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்து.. 5 பேர் பலி.!

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே செட்டியாப்பனூர் பகுதியில் பெங்களூருவில் இருந்து வந்த அரசு சொகுசு பேருந்தானது சாலை நடுவே இருந்த தடுப்பு சுவரை மோதி எதிரே வந்த தனியார் ஆம்னி பேருந்து மீது மோதி விபத்துகுள்ளானது.

இந்த கோர விபத்தில் சம்பவ இடத்திலேயே 4 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் 25க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மதுபோதையில் கோவில் மீது பெட்ரோல் குண்டு வீசிவிட்டு சென்றவர் கைது..!

பெங்களூருவில் இருந்து வந்த அரசு பேருந்தும், சென்னையில் இருந்து பெங்களூரு சென்ற தனியார் சொகுசு பேருந்தும்விபத்துக்குள்ளான சம்பவம் அறிந்த உடன், மீட்பு படையினர மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் விபத்து குறித்து நேரில் ஆய்வு செய்தார்.

இந்த சம்பவம் குறித்து, வாணியம்பாடி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பேருந்தில் பயணித்ததில், சென்னையை சேர்ந்த கிருத்திகா, வாணியம்பாடி புதூர் பகுதியை சேர்ந்த முகமது பைரோஸ், சித்தூரை சேர்ந்த அஜீத், மற்றும் அரசு பேருந்து ஓட்டுநர் ஏழுமலை மற்றும் நதீம் ஆகியோர் விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

 

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.