சத்தீஸ்கரில் 4 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை!

சத்தீஸ்கரில் 4 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை.

சத்திஸ்கர் மாநிலம், சுக்மா மாவட்டம் ஜகர்குண்டா- சிந்தல்நார் வனப்பகுதியில் மாவட்ட ரிசர்வ் பாதுகாவலர்கள், கோப்ரா பட்டாலியன் மற்றும் மத்திய ரிசர்வ் பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த நக்சல்கள் துப்பாக்கி சூட்டில் ஈடுபட்டனர். இதனையடுத்து இருதரப்பினருக்கும் இருதரப்பினருக்கும் இடையே துப்பாக்கி சூடு நடைபெற்ற நிலையில், இந்த தாக்குத்தலில், நக்சலைட்டுகள் 4 பேர் சடலங்களாக மீட்கப்பட்டனர்.

இதுகுறித்து பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கூறுகையில், இரு வீரர்கள் சீருடையில் இருந்ததாகவும், அவர்களிடம் இருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், தேடுதல் வேட்டை தொடரும் என்றும் தெரிவித்துள்ளனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.