உக்ரைனில் வீட்டின் மீது விழுந்த சிறிய ரக விமானத்தால் 4 பேர் பலி..!

உக்ரைனில் வீட்டின் மீது சிறிய ரக விமானம் விழுந்து 4 பேர் பலியாகியுள்ளனர்.

உக்ரைனில் உள்ள கோலம்பியா மாவட்டத்தில் உள்ள ஒரு வீட்டின் மீது சிறிய ரக விமானம் விழுந்துள்ளது. இந்த விமான விபத்து குறித்து தகவல் அறிந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்துள்ளனர். மிகுந்த போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்துள்ளனர்.

மேலும், இந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 3 பேர் பயணிகள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த விமான விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.