ராஜஸ்தானில் நேருக்கு நேர் மோதிய லாரிகள்-4 பேர் பலி..!

ராஜஸ்தான் மாநிலத்தில் இரண்டு லாரிகள் நேருக்கு நேர் மோதியதில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். 

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அஜ்மீர் தேசிய நெடுஞ்சாலையில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. செவ்வாய் கிழமை அதிகாலை இரண்டு லாரிகளும் எதிரெதிரே மோதியுள்ளது. இதனால் இந்த லாரிகள் தீப்பிடிக்கப்பட்டு எரிய தொடங்கியுள்ளது. உடனே தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து தீயணைப்பு வீரர்கள் இவ்விடத்திற்கு வந்து தீயை அணைத்துள்ளனர். இந்த லாரிகளில் 5 பேர் மொத்தமாக இருந்துள்ளனர். இதில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.  இந்த விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக ஆதர்ஷ் நகரத்தின் துணை ஆய்வாளர் கன்ஹையா லால் தெரிவித்துள்ளார்.