களைகட்டும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 4 பேர் காயம்..!

பொங்கல் திருநாளை முன்னிட்டு மதுரை அவனியாபுரத்தில் இன்று ஜல்லிக்கட்டு போட்டி காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. கொரோனா தடுப்பு விதிமுறைகளுடன் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுகிறது.

இந்த ஜல்லிக்கட்டில் மொத்தமாக 800-க்கும் மேற்பட்ட காளைகள் மற்றும் 430 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில், அவனியாபுரம் ஜல்லிக்கட்டில்  தற்போது வரை காளைகளில் உரிமையாளர்கள் இருவர், மாடுபிடி வீரர் ஒருவர் மற்றும் பார்வையாளர் ஒருவர் என 4 பேர் காயமடைந்துள்ளனர்.

பார்வையாளர் பலத்த காயம் அடைந்துள்ளதால் ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

author avatar
murugan