கராச்சியில் நடந்த பேரணியில் கையெறி குண்டு தாக்குதல் 39 பேர் காயம்.!

பாகிஸ்தானின் கராச்சியில் நடைபெற்ற பேரணியில் கையெறி குண்டு வீசப்பட்டதில் 39 பேர் காயமடைந்தனர்.

பாகிஸ்தானின் கராச்சியில் நேற்று மாலை ஜமாஅத்-இஸ்-இஸ்லாமிய  சார்பில் பேரணி நடைபெற்றது. இந்த பேரணி மீது கையெறி குண்டு வீசியதில் 39 பேர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குல்ஷன்-இ-இக்பால் பகுதியில் பேரணியின் போது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் கையெறி குண்டு வீசினர் என்று ஜமாஅத்-இ-இஸ்லாமி செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.

ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு ஓராண்டு நிறைவு பெற்றதை முன்னிட்டு ஜமாஅத்-இஸ்லாமி அமைப்பு  பேரணியை மேற்கொண்டனர். பாகிஸ்தானில் தடைசெய்யப்பட்ட அமைப்பான சிந்துடேஷ்  அமைப்பு இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது.

இந்த கையெறி குண்டு தாக்குதலில் காயமடைந்தவர்களில் 5 பேர் அல் முஸ்தபா மருத்துவமனைக்கும், ஏழு பேர் ஜின்னா முதுகலை மருத்துவ மையத்திற்கும், 11 பேர் ஆகா கான் பல்கலைக்கழக மருத்துவமனைக்கும், 10 பேர் லியாகத் தேசிய மருத்துவமனைக்கும் கொண்டு செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இதுவரை எந்த மரணமும் ஏற்படவில்லை.

காயமடைந்தவர்களில் பெரும்பாலோர் மிகச் சிறிய காயங்கள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

author avatar
murugan