கடந்த 7 ஆண்டுகளில் இந்தியாவில் காட்டு யானை தாக்குதலால் 3,310 பேர் உயிரிழந்துள்ளதாக வன, சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேரளாவை சேர்ந்த ஆர்டிஐ பிரச்சாரகர் கோவிந்தன் நம்பூதிரி அவர்கள் கடந்த 7 ஆண்டுகளில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் காட்டு யானை தாக்குதல்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை பற்றிய விவரங்களை கேட்டுள்ளார். இது குறித்து வன, சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி கடந்த 7 ஆண்டுகளில் காட்டு யானைகளின் தாக்குதலால் 3,310 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிலும் ஒடிசாவில் அதிக அளவிலான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும், அதனைத் தொடர்ந்து மேற்குவங்கம், அசாம், சத்தீஸ்கர் மற்றும் ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களிலும் காட்டு யானை தாக்கியதில் உயிரிழப்புகள் அதிகளவில் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒடிசாவில் கடந்த 2014 – 2021 வரையிலான காலகட்டங்களில் அதிகபட்சமாக 589 பேர் காட்டு யானை தாக்குதலால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அசாமில் 479 பேரும், சத்தீஸ்கரில் 413 பேரும், ஜார்கண்டில் 480 பேரும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தெரிவித்துள்ள கோவிந்தன், காட்டு யானைகளின் தாக்குதலால் மனித உயிரிழப்புகள் எண்ணிக்கை அதிகரித்து வருவது கவலை அளிப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் வன விலங்குகள் மற்றும் மனித உயிரிழப்பை குறைப்பதற்கு ஒரு சரியான வழிமுறை உருவாக்கப்பட வேண்டும் எனவும், இது தற்போதைய காலத்தின் தேவையாக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மைத்ரேய முகூர்த்தம்- மைத்ரேய முகூர்த்தம் என்றால் என்ன இந்த மாதம் எந்த நாள் வருகிறது என்பதை பற்றி இப்பதிவில் காணலாம். மைத்ரேய மூகூர்த்தம் : கடன் இல்லாமல்…
IPL2024: பஞ்சாப் அணி 17.5 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 163 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டை வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில் சென்னை அணியும்,…
Mutton pickle-மட்டன் ஊறுகாய் செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம் . தேவையான பொருட்கள் : மட்டன் =1/2 கிலோ மஞ்சள் தூள் =1 ஸ்பூன்…
8 வடிவ நடை பயிற்சி-எட்டு வடிவ நடை பயிற்சி செய்யும் முறை அதன் பயன்கள்,தவிர்க்க வேண்டியவர்கள் பற்றி இப்பதிவில் காணலாம். 8 வடிவ நடை பயிற்சி செய்யும்…
Heat Wave : வழக்கத்தை விட இந்தாண்டு வெப்பநிலை அதிகரிக்க 2 காரணங்களை இந்திய வானிலை ஆய்வு மைய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். வழக்கத்தை விட இந்தாண்டு வெயிலின்…
Mumbai Indians : ஐபிஎல் தொடரில் நட்சித்திர அணியான மும்பை இந்தியன்ஸ் 7 தோல்விகளுக்கு பிறகும் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெரும் வாய்ப்புகளை பற்றி பார்ப்போம்.…