ஒரு நிறுவனம் தயாரிக்கும் ஒரே தடுப்பூசிக்கு 3 விலைகளா? – சோனியா காந்தி சரமாரி கேள்வி!

ஒரு நிறுவனம் தயாரிக்கும் ஒரே தடுப்பூசிக்கு 3 விலைகளா? என கேள்வி எழுப்பி பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி கடிதம்.

காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி கடிதத்தில், நாடு முழுதும் கொரோனா வைரஸ்  தாண்டவமாடிக கொண்டிருக்கும் நேரத்தில், மக்கள் நலனில் அக்கறையுள்ள எந்த ஒரு தலைவரும் மக்கள் துயரப்படும் நேரத்தில் விலையை உயர்த்தி அவர்களை வதைக்க அனுமதிக்க மாட்டார்கள் என கூறியுள்ளார்.

ஒரு நிறுவனம் தயாரிக்கும் ஒரே தடுப்பூசிக்கு மத்திய அரசுக்கு ரூ.150, மாநில அரசுக்கு ரூ.400, தனியார் மருத்துவமனைகளுக்கு ரூ.600 என மூன்று விலைகளா? என கேள்வி எழுப்பி, மக்கள் துயரத்தை பயன்படுத்தி லாபம் சம்பாதிக்க ஒரு தனியார் நிறுவனத்தை மத்திய அரசு எப்படி அனுமதிக்கலாம் என்றும் கேட்டுள்ளார்.

மேலும், சரியான மருத்துவ வசதிகள் இல்லை, படுக்கைகள் இல்லை, ஆக்சிஜன் இல்லை, மருந்து இல்லை என்று அனைத்தும் தட்டுப்பாடுகள் உள்ள நிலையில், தடுப்பூசி மட்டுமாவது அனைவருக்கும் இலவசமாக வழங்க முயற்சி செய்யாமல் 18 முதல் 45 வயது உள்ள இளைய சமுதாயத்தினருக்கு தடுப்பூசிக்கு விலை நிர்ணயம் செய்திருப்பது கவலை அளிக்கிறது.

மேலும், மத்திய அரசு ஒதுக்கீடாக உள்ள 50% மருந்து பொருட்கள் எவ்வாறு வழங்கப்படுகிறது என்பது குறித்து அறிக்கை அளிக்கவேண்டும் என்றும் பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Recent Posts

சுட்டெரிக்கும் வெப்பநிலை… அதிகரிக்கும் வெப்ப அலை… காரணம் என்ன.?

Heat Wave : வழக்கத்தை விட இந்தாண்டு வெப்பநிலை அதிகரிக்க 2 காரணங்களை இந்திய வானிலை ஆய்வு மைய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். வழக்கத்தை விட இந்தாண்டு வெயிலின்…

21 mins ago

என்னங்க சொல்லறீங்க? இது மட்டும் நடந்தா மும்பை ப்ளே ஆஃப் செல்லுமா?

Mumbai Indians : ஐபிஎல் தொடரில் நட்சித்திர அணியான மும்பை இந்தியன்ஸ் 7 தோல்விகளுக்கு பிறகும் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெரும் வாய்ப்புகளை பற்றி பார்ப்போம்.…

1 hour ago

திடீரென பயங்கரமாக வெடித்து சிதறிய கல்குவாரி …விபத்து நடந்தது எப்படி.?

Virudhunagar: விருதுநகர் மாவட்டத்தில் கல்குவாரி ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். விருதுநகர் அருகே ஆவியூரில் உரிமம் பெற்ற கல் குவாரியும், வெடி…

1 hour ago

அடேங்கப்பா.! ரத்த அழுத்தத்தை கூட குறைக்குமாம் தர்பூசணி விதைகள்.!

Watermelon seeds-தர்பூசணி விதைகளின் ஆரோக்கிய நன்மைகளை இப்பதிவில் தெரிந்து கொள்வோம். தர்பூசணியை சாப்பிட்டுவிட்டு அதன் விதைகளை தூக்கி எரிந்து விடுவோம். ஆனால் அந்த விதைகள்  நம்மில் பலரும்…

1 hour ago

ஸ்டார் படத்தை பார்த்துவிட்டு கவினுக்கு கால் செய்த சிம்பு! என்ன சொல்லிருக்காரு தெரியுமா?

STAR : ஸ்டார் படத்தை பார்த்துவிட்டு நடிகர் கவினுக்கு கால் செய்து சிம்பு பாராட்டியுள்ளார். நடிகர் கவின் டாடா திரைப்படத்தின் பெரிய வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக பியார்…

2 hours ago

டெல்லி பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்.! போலீசார் தீவிர சோதனை…

Bomb Threat : டெல்லி, நொய்டாவில் 60க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து இமெயில் வந்துள்ளது. டெல்லி மற்றும் உ.பி நொய்டாவில் இதுவரை 60க்கும் மேற்பட்ட…

2 hours ago