மேலும் 3 ரபேல் இந்தியா வருகை.., 24 விமானங்கள் ஒப்படைப்பு ..!

நேற்று மேலும் மூன்று விமானங்கள் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்திய விமானப்படையை மேலும் பலப்படுத்துவதற்காக பிரான்ஸ் நிறுவனத்துடன் இந்தியா கடந்த 2016-ஆம் ஆண்டு 58 ஆயிரம் கோடி செலவில் 36 ரபேல் போர் விமானங்களை வாங்க ஒப்பந்தம் செய்தது. இந்த 36 விமானங்களும் 2022-ம் ஆண்டுக்குள் இந்தியாவில் ஒப்படைக்கப்படும் என கூறப்படுகிறது. இது தொடர்ந்து முதற்கட்டமாக கடந்த ஆண்டு ஜூலை மாதம் 5 ரபேல் போர் விமானங்கள் இந்தியா வந்து சேர்ந்தன.

அவை முறைப்படி இந்திய விமானப்படையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இணைக்கப்பட்டது. இதை தொடர்ந்து நவம்பர் மாதத்தில் மூன்று விமானங்களும், கடந்த ஜனவரியில் மூன்றும் விமானங்களும் வந்த நிலையில் நேற்று மேலும் மூன்று விமானங்கள் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டது. இதுவரை ஏழு கட்டங்களாக 24 ரபேல் போர் விமானங்கள் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

author avatar
murugan