அரசு பள்ளி குடிநீர் தொட்டியில் பினாயில் ஊற்றிய 3 சிறார்கள் கைது…!

கரூரில், வீரணாம்பட்டி அரசு நடுநிலை பள்ளியில் குடிநீர் தொட்டியில் பினாயில் கலக்கப்பட்ட விவகாரத்தில் 3 சிறார்கள் கைது. 

கரூரில், வீரணாம்பட்டி அரசு நடுநிலை பள்ளியில், நேற்று முன்தினம் குடிநீர் தொட்டியில் பினாயில் கலக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

இதனை தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக 3 சிறார்களை போலீசார் கைது செய்துள்ளனர். அந்த சிறார்களிடம் விசாரணை மேற்கொண்டதில், விளையாட்டுத்தனமாக பினாயிலை குடிநீர் தொட்டியில் ஊற்றியதாக தெரிவித்துள்ளனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.