ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தற்கொலை; எப்ஐஆரில் எம்எல்ஏ மகன் பெயர்..!

தெலுங்கானாவில் தம்பதிகள் மற்றும் அவர்களது மகள்கள் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டதாக வழக்கில் எம்.எல்.ஏ.வின் மகனின் பெயர் எஃப்.ஐ.ஆரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தெலுங்கானா மாநிலம் பத்ராத்ரி-கொத்தகுடெம் மாவட்டத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர். தற்கொலைக் குறிப்பில் சிக்கிய எம்.எல்.ஏ.வின் மகனின் பெயர் எஃப்.ஐ.ஆரில் குறிப்பிடப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு ஒரே குடும்பத்தை சார்ந்த தம்பதிகள் மற்றும் அவர்களது 2 மகள்கள் உட்பட 4 பேர் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றதாக போலீசார் தெரிவித்தனர். இதில், 3 பேர் உயிரிழந்த நிலையில் தம்பதியின் ஒரு மகள் 80 சதவீத தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இறந்தவர் விட்டுச் சென்றதாகக் கூறப்படும் தற்கொலைக் குறிப்பில் உள்ளூர் எம்.எல்.ஏ.வின் மகன் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அதன்பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது என்று போலீஸார் தெரிவித்தனர்.

author avatar
murugan