சாத்தூர் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 3 லட்சம் மதிப்பிலான பட்டாசுகள் எரிந்து நாசம்!

விருதுநகர் மாவட்டத்திலுள்ள சாத்தூர் பட்டாசு கடையில் ஏற்பட்ட வெடி விபத்தில் மூன்று லட்சத்திற்கும் அதிக மதிப்பிலான பட்டாசுகள் வெடித்து நாசமாகியுள்ளது.

விருதுநகர் மாவட்டத்திலுள்ள சாத்தூர் அருகே வள்ளி மில் எனும் பகுதியில் கோவில்பட்டியை சேர்ந்த வெற்றிவேல் என்பவருக்கு சொந்தமான பட்டாசு கடை ஒன்று உள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக இந்த கடை கடந்த மூன்று மாதங்கள் திறக்கப்படாமல் அடைக்கப்பட்ட நிலையிலேயே இருந்தது.

இந்நிலையில், திடீரென ஏற்பட்ட மின்கசிவு காரணமாக உள்ளேயிருந்து பட்டாசுகள் வெடித்துள்ளது. சிறிது நேரத்தில் கடை முழுவதும் தீ பரவி அப்பகுதியே பட்டாசு சத்தத்தில் அதிர்ந்தது. தகவல் அறிந்து அங்கு சென்ற தீயணைப்பு துறையினர் தண்ணீர் அடித்து தீயை கட்டுப்படுத்தினர். இந்த விபத்தில் மூன்று லட்சம் ரூபாய் மதிப்பிலான பட்டாசுகள் அனைத்தும் தீயில் வெந்து சாம்பலாகி உள்ளன.

author avatar
Rebekal