ஓசூர் அருகே ஒரு பெண் உள்பட 3 போலி மருத்துவர்கள் கைது..!

ஓசூர் அருகே மருத்துவம் படிக்காமலேயே சிகிச்சை அளித்து வந்த ஒரு பெண் உள்பட 3 போலி மருத்துவர்கள் கைது 

ஓசூர் அருகே உள்ள பேலகொண்டப்பள்ளி, கொத்தகொண்டப்பள்ளியில் மருத்துவம் படிக்காமலேயே சிகிச்சை அளித்து வந்த ஒரு பெண் உள்பட 3 போலி மருத்துவர்களை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

இதனை தொடர்ந்து, அவர்கள் நடத்தி வந்த கிளினிக்குகளுக்கு சீல் வைத்து அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்னதாக, திருவாரூர் மாவட்டத்தில் மருத்துவம் படிக்காமல் சிகிச்சையளித்து வந்த 10 போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment