ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்ததால் கோவையை சேர்ந்த இளைஞன் தற்கொலை செய்து உயிரை மாய்துகொண்டுள்ளார்.
அண்மை காலங்களாகவே ஆன்லைன் ரம்மி விளையாட்டின் மூலம் தங்கள் பணத்தை இழந்து அதனால் கடன் பிரச்சனை அல்லது மன உளைச்சலுக்கு ஆளாகி உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து விட்டது.
அண்மையில், கூட விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த இளம் வயதுடைய ஒருவர் தற்கொலை செய்துகொண்டார். இந்நிலையில், தற்பொழுது கோவையில் இது போன்ற ஒரு துயரசம்பவம் நேர்ந்துள்ளது. கோவையில் சீரநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்த 28 வயதுடைய மதன்குமார் எனும் இளைஞன் ஆன்லைன் ரம்மியில் தனது நேரத்தையும் பணத்தையும் அதிகமாக செலவு செய்துள்ளார்.
இந்த விளையாட்டின் சுவாரஸ்யம் கூடவே கடன் வாங்கி ரம்மி விளையாடி அந்த பணத்தையும் இழந்துள்ளார். அதன் பின் என்ன செய்வதென்று தெரியாமல் மன உளைச்சலில் தவித்த மதன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
இது தொடர்பாக, போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர், பலரின் உயிர்களை பறிக்க கூடிய இந்த ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்யுமாறும் போலீசாரிடம் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Priya Anand : நடிகை பிரியா ஆனந்த் படுகிளாமராக நடித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக…
Inga Naan Thaan Kingu : சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள இங்க நான் தான் கிங்கு படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. வடக்குப்பட்டி ராமசாமி படத்தின் வெற்றியை தொடர்ந்து…
Realme C65 5G : ரியல்மி நிறுவனம் தனது அடுத்த 5ஜி ஸ்மார்ட் போனான ரியல்மி சி65 5ஜி வெளியிட்டது. ரியல்மி நிறுவனம் இந்த ஆண்டில் அடுத்தடுத்து…
DeepFake : 75 சதவீத இந்தியர்கள் போலியான டீப்ஃபேக் விடீயோக்களை பார்த்துள்ளனர் என ஓர் ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது. தொழில்நுட்ப உலகில் அதிவேகமாக வளர்ந்து வரும் AI எனும்…
Morning Exercise-காலையில் உடற்பயிற்சி செய்வதால் நம் உடலில் ஏற்படும் மாற்றங்களை இப்பதிவில் காணலாம். உடல் ஆரோக்கியமாகவும் ,கட்டுக்கோப்பாகவும் வைத்துக்கொள்ள தினமும் உடற்பயிற்சி செய்வது அவசியம். உடற்பயிற்சி பயிற்சியின்…
Abhishek Sharma : உலக கோப்பைக்கு அபிஷேக் சர்மா சரிப்பட்டு வரமாட்டார் என யுவராஜ் சிங் கூறியுள்ளார். ஐபிஎல் போட்டியில் ஹைதராபாத் அணிக்காக விளையாடி வரும் அபிஷேக்…