பிரேசிலில் தற்பொழுது ஒரு மிக அதிகளவில் கொரோனா வைரஸ் பரவி வருவதால் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 2,355 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர்.
கொரோனா தொற்று உலகம் முழுவதிலும் பெரும் அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தி இருந்தாலும், தற்போது பல இடங்களில் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்துள்ளது. இருப்பினும் தென் அமெரிக்க நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு தற்போது மீண்டும் அதிக அளவில் தொடங்கியுள்ளது. இந்நிலையில் பிரேசிலிலும் கொரோனா பரவல் கடந்த சில நாட்களாக மிக அதிக அளவில் காணப்படுகிறது. பிரேசில் உயிரிழப்பில் உலக அளவில் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் உள்ளது.
கொரோனா பாதிப்பில் இந்தியாவுக்கு அடுத்தபடியாக 3-வது இடத்தில் பிரேசில் உள்ளது. கடந்த சில வாரங்களாக பிரேசிலில் தொற்று பரவல் மிக அதிக அளவில் பரவத் தொடங்கியுள்ள நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் பிரேசில் 74,237 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 2,335 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
IPL2024:ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 200 ரன்கள் எடுத்தனர். இதனால் ஹைதராபாத் அணி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில்…
Andhra pradesh: ஆந்திராவில் ரூ.2,000 கோடி பணத்துடன் சென்ற 4 கண்டெய்னர்கள் பிடிபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திராவில் மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதால் பறக்கும்…
Indian Team : டி20 அணியை அறிவித்த பிறகு இந்திய அணியில் இடம்பெற்றுள்ள சில வீரர்கள் அடுத்தடுத்து ஐபிஎல் போட்டியில் சொதப்பி வருவதால், ரசிகர்கள் கவலையில் இருக்கின்றனர். வருகிற…
Prajwal Revanna : கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் ரேவண்ணா முயற்சித்துள்ளார் என கர்நாடகா காங்கிரஸ் அமைச்சர் சர்ச்சையாக கருத்து தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி…
Annamalai Biopic : தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் வாழ்கை வரலாற்று படம் எடுக்கப்படவுள்ளதாகவும் அதில் விஷால் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள்,…
Weather Update : அடுத்த 3 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வெயில் வாட்டி…