2019 பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க நிச்சயம் தோல்வியை தழுவும் : சவ்கதா ராய்..!

மோடி தலைமையிலான மத்திய அரசின் மீது தெலுங்கு தேசம் கட்சி நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்தது. அதற்கான விவாதம் இன்று நடைபெற்றது. இந்த விவாதத்தில் பல கட்சிகளை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் பேசி வருகின்றனர்.

இந்த விவாதத்தில் பங்கேற்காமல் சிவசேனா கட்சியும், பிஜு ஜனதா தள கட்சியும் வெளியேறியது. நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பிரதமர் நரேந்திர மோடியை கடுமையாக தாக்கி பேசினார்.அதில் நாடாளுமன்றத்தில் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துப் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மீது உரிமை மீறல் தீர்மானம் கொண்டு வர பாஜக முடிவு செய்துள்ளது.

இத்தகவலை மத்திய அமைச்சரும் பாஜக மூத்த தலைவர்களில் ஒருவருமான அனந்த் குமார், செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். மேலும், நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தியின் நடவடிக்கைகள் குழந்தைத்தனமானதாக உள்ளது, என விமர்சித்த அமைச்சர் அனந்த் குமார், அவர் முதிர்ச்சி இல்லாமல் இருப்பது துரதிர்ஷ்டவசமானது, என்றும் கடுமையாக விமர்சித்தார்.

எதிர்க்கட்சிகள் மக்களைவையில் மத்திய அரசின் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்தது.இது தொடர்பான விவாதம் தற்போது நடைபெற்று வருகின்றது.

பிரதமர் புன்னகையில் ஒரு பதற்றம் தெரிகிறது என்னை பார்க்க தவிர்க்கிறார் அவர் 15 லட்சம் மற்றும் 2 கோடி வேலைவாய்ப்பு தருவதாக சொல்லி அனைவரையும் ஏமாற்றிவிட்டார் .இது மட்டுமில்லை பாதுகாப்பு அமைச்சர் உண்மையை வெளிப்படையாக கூற வேண்டும் என்று ஆக்ரோஷமாக தெரிவித்தார்.

நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன தேசத்துக்கு எதிராக மட்டுமல்ல, அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிராகவும் குற்றங்கள் நடக்கிறது .பின்னர் அவையில் பேசிக்கொண்டே இருந்தவாறு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிரதமர் நரேந்திர மோடியின் அருகில் சென்று அவரை கட்டிப் பிடித்தார்.இதனால் அவையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது

மேலும் அதிக விலை கொடுத்து போர் விமானங்களை மோடி அரசு வாங்குவதாகவும் இதனால் மத்திய அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்படுவதாகவும் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து குற்றம் சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பேசிய திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி சவ்கதா ராய், தேர்தலில் ஒத்தைக்கு ஒத்தை மோதினால் பாஜக தோல்வியை மட்டுமே தழுவும் என தெரிவித்துள்ளார்.

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் சவ்கதா ராய் பேசுகையில், பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் சுமார் 25 லட்சம் வேலை வாய்ப்புகள் அழிக்கப்பட்டுள்ளதாகவும், மக்களின் மீதும், கூட்டணி கட்சிகள் மீதும் பா.ஜ.க நம்பிக்கையை இழந்துவிட்டதாகவும் குறிப்பிட்டார்.பாராளுமன்ற தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தலில் பா.ஜ.க கடுமையான வீழ்ச்சியை சந்தித்தாகவும், கர்நாடகவிலும் தோல்வியை தழுவியதாகவும் தெரிவித்த அவர், வரும் 2019 பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க நிச்சயம் தோல்வியை தழுவும் எனவும் தெரிவித்தார்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment