பெண் ஒருவரை அனைவரது துணிகளையும் துவைக்க சொல்லிய நபருக்கு, 2000 பெண்களுக்கு 6 மாதம் இலவசமாக துணி துவைத்து கொடுக்க வேண்டும் என பீகார் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
பீகாரில் உள்ள மதுபானி மாவட்டத்தில் உள்ள ஜஞ்சர்பூர் பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் ஒரு பெண்ணை அனைவரது துணிகளையும் துவைக்க சொல்லி துன்புறுத்தியதாகவும், அவரிடம் அநாகரீகமாக நடந்து கொண்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதனையடுத்து கடந்த ஏப்ரல் 18ஆம் தேதி இந்த பாதிக்கப்பட்ட பெண், காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இது குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது வழக்கை விசாரித்த நீதிபதிகள் அடுத்த ஆறு மாதங்களுக்கு குற்றம் சாட்டப்பட்ட நபர், கிராமத்திலுள்ள அனைத்து பெண்களின் ஆடைகளையும் துவைக்க வேண்டும் எனவும், இதனால் அவர் மனதில் பெண்கள் மீது ஒரு மரியாதை உருவாகும் எனவும் கூறியுள்ளனர்.
அதுமட்டுமல்லாமல் குற்றம் சாட்டப்பட்ட நபர் பெண்களின் ஆடைகளை கழுவிய பிறகு அவர்கள் துணிகளை இஸ்திரி செய்து கொடுக்க வேண்டும் என நீதிமன்றம் அதிரடியான உத்தரவை பிறப்பித்துள்ளது. அந்த கிராமத்தில் கிட்டத்தட்ட 2000 பெண்கள் உள்ளதாக கூறப்படுகிறது. குற்றம் சாட்டப்பட்ட நபர் 20 வயதுடைய லால் குமார் ஆவார். இவர் ஏற்கனவே சலவை வேலைதான் செய்து வருவதாகவும், இதனால் தான் இவருக்கு இப்படிப்பட்ட ஒரு தண்டனையை கொடுத்து பெண்கள் மீது மரியாதையை ஏற்படுத்தும் விதமாக நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
Inga Naan Thaan Kingu : சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள இங்க நான் தான் கிங்கு படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. வடக்குப்பட்டி ராமசாமி படத்தின் வெற்றியை தொடர்ந்து…
Realme C65 5G : ரியல்மி நிறுவனம் தனது அடுத்த 5ஜி ஸ்மார்ட் போனான ரியல்மி சி65 5ஜி வெளியிட்டது. ரியல்மி நிறுவனம் இந்த ஆண்டில் அடுத்தடுத்து…
DeepFake : 75 சதவீத இந்தியர்கள் போலியான டீப்ஃபேக் விடீயோக்களை பார்த்துள்ளனர் என ஓர் ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது. தொழில்நுட்ப உலகில் அதிவேகமாக வளர்ந்து வரும் AI எனும்…
Morning Exercise-காலையில் உடற்பயிற்சி செய்வதால் நம் உடலில் ஏற்படும் மாற்றங்களை இப்பதிவில் காணலாம். உடல் ஆரோக்கியமாகவும் ,கட்டுக்கோப்பாகவும் வைத்துக்கொள்ள தினமும் உடற்பயிற்சி செய்வது அவசியம். உடற்பயிற்சி பயிற்சியின்…
Abhishek Sharma : உலக கோப்பைக்கு அபிஷேக் சர்மா சரிப்பட்டு வரமாட்டார் என யுவராஜ் சிங் கூறியுள்ளார். ஐபிஎல் போட்டியில் ஹைதராபாத் அணிக்காக விளையாடி வரும் அபிஷேக்…
Election2024:பிரதமர் மோடி இன்னும் ஓரிரு நாட்களில் கண்ணீர் சிந்துவார் என தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார் மக்களவை தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெறும்…