கொத்தடிமைகளாக வேலை பார்த்து வந்த 40 குழந்தைகள் உள்ளிட்ட 200 பேர் மீட்பு.!

  • திருவள்ளூரில் செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக பணியாற்றி வந்ததாக கூறி, 40 குழந்தைகள் உள்ளிட்ட 200 பேர் வருவாய்த் துறையினர் உதவியுடன் மீட்கப்பட்டனர்.

திருவள்ளூர் மாவட்டம் தாமரைபாக்கம் அருகே செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக பணியாற்றி வந்ததாக கூறி, 40 குழந்தைகள் உள்ளிட்ட 200 பேர் மீட்கப்பட்டனர். பின்னர் அவர்களுக்கு விடுவிப்பு சான்றும், உதவித்தொகையாக ரூ.1000 வழங்கப்பட்டு அவர்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்றும், சூளை உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வருவாய்த்துறையினர் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அங்கு 10-ம் வகுப்பு மட்டுமே படித்துவிட்டு தொழிலாளர்களுக்கு மருத்துவம் பார்த்ததாகக் கூறி, ஒடிசாவை சேர்ந்த பிரேம், ஆனந்த் என இருவரும் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க சென்ற செங்கல் சூளை உரிமையாளர் சங்கத்தினரை போலீசார் தடுத்து நிறுத்தியதால் அங்கு சற்று வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் உரிமையாளர் பேசுகையில், இங்கு வேலை பார்த்தவர்கள் அவர்கள் விருப்பத்துடன் வந்தவர்கள் எனவும், தங்கள் சுய லாபத்துக்காக கொத்தடிமைகள் என்று கூறி வருவாய்த் துறையினர் உதவியுடன் அழைத்துச் சென்றதாக அவர்கள் குற்றம்சாட்டினர்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்