திருப்பதி அருகே இரு இடங்களில் கடத்த முயன்ற ரூ.20 லட்சம் மதிப்புள்ள செம்மரங்கள் பறிமுதல்…!

திருப்பதி அருகே இரு வெவ்வேறு இடங்களில் வெட்டி கடத்த முயன்ற 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள செம்மரங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

திருப்பதி அருகே இரு வெவ்வேறு பகுதிகளில் வெட்டி கடத்த முயற்சித்த 20 லட்சம் மதிப்புள்ள செம்மரங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும் திருப்பதி சித்தூர் மாவட்டம் கொங்கனவாரிபள்ளி அருகே வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்துள்ளனர்.

அப்பொழுது செம்மரக் கட்டைகளைக் கடத்த முயன்ற கடத்தல்காரர்கள் அப்பகுதியில் இருந்து செம்மர கட்டைகளுடன் தப்பிக்க முயற்சி செய்துள்ளனர். வனத்துறையினரை கண்டதும் அந்த கடத்தல் கும்பல் அப்பகுதியிலேயே 576 கிலோ எடையுள்ள 16 செம்மரங்களை விட்டு சென்றுள்ளது. 10 லட்சம் மதிப்புள்ள இந்த செம்மரங்கள் தற்பொழுது பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

author avatar
Rebekal