20க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் அதிரடி கைது.! இலங்கை கடற்படை நடவடிக்கை.!

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி 20க்கும் மேற்பட்ட மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.  

புதுக்கோட்டை கடற்கரை பகுதியில் இருந்து இன்று காலை 400க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடிக்க சென்றன. அப்போது, இலங்கை, காரை நகர் தென்கிழக்கு கோவளம் அருகே இலநகை கடற்படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அந்த சமயம் பிற்பகல் 2-4 மணிக்குள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி 20க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

அவர்களை தற்போது காரைநகர் கடற்படை முகாமிற்கு இலங்கை கடற்படையினர் அழைத்து சென்றுள்ளனர். அவர்கள் அந்த முகாமிற்கு செல்ல 6 – 7 மணி அளவில் நேரம் ஆகும் என்பதால், அதன் பிறகு தான் மீனவர்கள் பற்றிய விவரங்கள் தெரியவரும் என கூறப்படுகிறது .

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment