பெங்களூரில் கட்டிட மேற்கூரை இடிந்து விழுந்ததில் 2 தொழிலாளர்கள் பலி, 3 பேர் காயம்

செவ்வாய்க்கிழமை அதிகாலையில் பெங்களூருவின் சில பகுதிகளில் பெய்த கனமழையால், மகாதேவபுராவில் உள்ள ஹூடி வட்டம் அருகே,கட்டிடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் இரண்டு தொழிலாளர்கள் உயிரிழந்தனர் மற்றும் மூன்று பேர் காயமடைந்துள்ளனர்.

“செவ்வாய்கிழமை அதிகாலை 5:30 மணியளவில் சம்பவம் நடந்தாலும், மற்ற தொழிலாளர்கள் அந்த இடத்திற்குச் சென்றபோதுதான் தெரிய வந்தது” என்று போலீஸார் தெரிவித்தனர்.

“கனமழை பெய்ததால், அவர்கள் தரை தளத்தில் தூங்கினர்,” அப்பொழுதுதான் இந்த விபத்து நடந்ததுள்ளது  என்று போலீசார் மேலும் தெரிவித்தனர்.

author avatar
Dinasuvadu Web

Leave a Comment