கிருஷ்ணகிரி ஆணவக்கொலை.! பெண்ணின் தந்தையை தொடர்ந்து மேலும் இருவர் நீதிமன்றத்தில் சரண்.!

கிருஷ்ணகிரி ஆணவக்கொலை தொடர்பாக தேடப்பட்டு வந்த 2 பேர் சேலம் நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளனர். 

நேற்று முன்தினம் (மார்ச் 21ஆம் தேதி) மதியம் 1.30 மணி அளவில் கிருஷ்ணகிரி மாவட்டம் கேஆர்பி அணை அருகே ஜெகன் எனும் 28வயது இளைஞர் ஒரு கும்பலால் நடுரோட்டில் பயங்கர ஆயுதங்களால் தாக்கப்பட்டு, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

ஆணவ கொலை :

உயிரிழந்த ஜெகன் , சரண்யா எனும் பெண்ணை அண்மையில் பெண் வீட்டார் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்து கொண்டார். இதன் காரணமாக தான் சரண்யாவின் தந்தையும், அரசியல் பிரமுகருமான சங்கர், தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து இந்த ஆணவ கொலை சம்பவத்தை நிகழ்த்தியுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

பெண்ணின் தந்தை சரண் :

இந்த ஆணவ கொலை சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்த நிலையில், முதலில் பெண்ணின் தந்தை சங்கர் கிருஷ்ணகிரி நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். அவர் தற்போது சேலம் மத்திய சிறையில் உள்ளார்.

மேலும் இருவர் சரண் :

இதனை தொடர்ந்து இன்று, காவல்துறையால் தேடப்பட்டு வந்த முரளி மற்றும் நாகராஜ் ஆகிய இருவரும் சேலம் நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளனர். இந்த கொலை சம்பவத்தில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு இருக்கிறது என்று காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர் .

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment